For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியிலிருந்து 1.40 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்.. தமிழகத்தில் வெள்ள எச்சரிக்கை

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு | கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை- வீடியோ

    பெங்களூர்: காவிரியிலிருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதால், தமிழகத்தில் காவேரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

    தற்போது மீண்டும் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.85 அடியை தாண்டியுள்ளது. நாளை மீண்டும் அணை நிரம்பும் என்று கூறப்படுகிறது.

     Flood warning in Cauvery surrounding: 1,40,000 cubic feet of water released in Cauvery

    தற்போது கபினியிலிருந்து 80,000 கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மொத்தமாக காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் பெரிய அளவில் காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக ஓடுகிறது. கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப் பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் அதிக தண்ணீர் வருகிறது.

    அதிக தண்ணீர் வருவதால் தமிழக காவிரிக் கரையோரங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவேரி கரையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    English summary
    Flood warning in Cauvery surrounding: 1,40,000 cubic feet of water released in Cauvery.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X