For Quick Alerts
For Daily Alerts
Just In
மெரினாவில் பதற்றம்... வேளச்சேரி டூ பீச் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
சென்னை மெரினாவில் போலீஸ் தடியடியால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சென்னை வேளச்சேரி -கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: போலீசாரின் தடியடியால் மெரினா கடற்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை மார்க்கத்தில் செல்லும் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் இன்று காலை அதிரடியாக தடியடி நடத்தி கலைத்தனர். சிதறி ஓடும் மாணவர்களையும் அவர்கள் விரட்டியடித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெரினா மார்க்கமாக செல்லும் சென்னை வேளச்சேரி - கடற்கரை பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் செல்வோர், கல்லூரி செல்வோர் பெரும் அவிதியடைந்துள்ளனர்.
Comments
English summary
There is a tense atmosphere in Marina because of police batons. The flying train service has halted temporarily between Chennai Velachery to Beach station.
Story first published: Monday, January 23, 2017, 11:12 [IST]