ஸ்டாலினுடன் வெளிநாட்டு தூதர்கள் சந்திப்பு… சிறப்பு ஆலோசனை
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை வெளிநாட்டு தூதர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னை: திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை பல்வேறு நாடுகளின் தூதர்கள் இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசினார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினை பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற வெளிநாட்டு தூதர் குழுவில், ஃபின்லாந்து நாட்டின் தூதர் நினா இர்மேலி வஸ்குன்லதி, ஐஸ்லாந்து நாட்டின் தூதர் தொரிர் இஸ்பென், நார்வே நாட்டின் தூதர் நில்ஸ் ரக்நர் கம்ஸ்வக், ஸ்வீடன் நாட்டின் தூதர் ஹரால்ட் சண்ட்பெர்க், டென்மார்க் நாட்டின் தூதர் பீட்டர் ஜேக்சோ ஜென்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
அப்போது, தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல், தொழில் தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேரில் சந்தித்து வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.