For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரன் குரூப் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக துண்டுபிரசுரம் கொடுத்த வழக்கு- 4 பேர் கைது

By Siva
Google Oneindia Tamil News

சேலம்: டிடிவி தினகரன் ஆதரவு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. வெங்கடாசலம் இன்று சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டியில் தமிழக அரசுக்கு எதிராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் உள்பட டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 16 பேர் பொது மக்களிடம் நோட்டீஸ் வழங்கியதாக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விநாயகம் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

Former ADMK MLA Venkatachalam held in Salem

அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் வெங்கடாசலம் உள்பட 4 பேரை சேலம்-அன்னதானப்பட்டி போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்ததாக மொத்தம் 16 பேர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி மீதும் வழக்குப்பதிவு செய்ய்பட்டுள்ளது.

English summary
Salem police arrested three supporters of TTV Dinakaran including former ADMK MLA Venkatachalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X