For Daily Alerts
Just In
அறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள்.. முதல்வர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை!
பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Recommended Video
அண்ணாவின் பிறந்தநாள்.. முதல்வர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை!-வீடியோ
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி அவரது புகைப்படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது புகைப்படத்திற்கு மலர் தூவியும் தல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இதில், ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், கனிமொழி, ராசா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
English summary
Former Chief minister Annadurai's 110 birthday celebrates today. CM Edappadi palanisami, Deputy CM O Paneerselvam and ministers paid respect to Anna's photo in Chennai anna salai.
Story first published: Saturday, September 15, 2018, 14:00 [IST]