For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் தேர்தல் முறையில் பெரும் சீர்திருத்தம் கொண்டுவந்த டி.என்.சேஷன் இப்போ முதியோர் இல்லத்தில்!

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சேஷன் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் தனது மனைவியுடன் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நிர்கதியான நிலையில் உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முறையில் முக்கிய சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்று பெருமைக்கு சொந்தக்காரர் டி.என்.சேஷன். இந்திய தேர்தல் தலைமை ஆணையராகப் பணியாற்றி முக்கிய சீர்திருத்தங்களை கொண்டு வந்த டி.என்.சேஷன் சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் தமது மனைவியுடன் வசித்து வருகிறார்.

Commissioner

பாலக்காட்டை சேர்ந்தவரான சேஷனுக்கு சொந்த ஊரில் வீடு இருந்தாலும், நோய்களுடன் போராடும் முதிய வயதில் கவனித்துக் கொள்ள பிள்ளைகள் இல்லாததால் முதியோர் இல்லத்தை நாடிச் சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு குழந்தைகள் இல்லாததாலும், பார்த்துக்கொள்ள உறவினர்களும் தயாராக இல்லாததாலும் இந்த இக்கட்டான நிலையில் நிர்கதியாக சேஷன் தவிக்கவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரிய பதவி, கைநிறைய பணம் ஆகியவை இருந்து முதுமையில் அரவணைப்பில்லாத நிலை என்பது கொடுமையிலும் கொடுமை என்பதை உணர்த்துகிறது சேஷன் வாழ்க்கை.

English summary
T N Seshan, former Chief Election Commissioner who is credited for reforming the electoral polity in India, is currently living in an old age home in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X