மாஜி அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் திருப்பூர் மாநகராட்சியில் போட்டி!
திருப்பூர்: தமிழக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் தற்போது உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாநகராட்சியில் போட்டியிடுகிறார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார். சிட்டிங் மேயர்கள் 8 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.
அதே நேரத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் திருப்பூர் மாவட்ட செயலருமான எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் மாநகராட்சியின் 24-வது வார்டில் போட்டியிடுவார் என அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா
2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆனந்தன் அமைச்சராக இருந்தார். பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதா மீண்டும் பதவி ஏற்றபோது ஆனந்தனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2015-ம் ஆண்டு ஆனந்தனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால் சட்டசபை தேர்தலில் ஆனந்தன் போட்டியிட வாய்ப்புத்தரப்படவில்லை. அதிமுக செல்வாக்குள்ள திருப்பூரில் அக்கட்சி வென்றால் ஆனந்தன் மேயராவதற்கான வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.