முன்னாள் அமைச்சர் செ மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு
முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார். சிவங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் மாதவன் உயிர் பிரிந்தது.
Recommended Video
சிவங்கை: முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் மாதவன் உயிர் பிரிந்தது. இவருக்கு மனைவி, இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.
திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 4 முறை சட்டசபை தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962, 1967, 1971, 1984 என 4 முறை எம்.எல்.ஏ.வாக மாதவன் இருந்தார். அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த, 1967 முதல் 76 வரை அண்ணாதுரை, கருணாநிதி ஆட்சியில், சட்டம், தொழில் துறை அமைச்சராக இருந்தார். பின், 1982ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார். 1984ஆம் ஆண்டு திருப்பத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். 1996ஆம் ஆண்டு மீண்டும் திமுகவில் சேர்ந்தார். இறுதி வரை திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மதியம் சிங்கம்புணரியில் உள்ள வீட்டில் காலமானார். இன்று மதியம், 3 மணிக்கு சிங்கம்புணரியில் இறுதி சடங்கு நடக்கிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.