மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக கே. பாலகிருஷ்ணன் தேர்வு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக கே. பாலகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநில மாநாடு தூத்துக்குடியில் கடந்த பிப்ரவரி 17 முதல் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் நிறைவு நாளான இன்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டார்.
இதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே. பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2006 முதல் 2011ம் ஆண்டு வரை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர் பாலகிருஷ்ணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய பிரிவு செயலாளராக நீண்ட நாட்களாக செயல்பட்டு வருபவர்.
முன்னதாக தூத்துக்குடி அண்ணா நகரில் மார்க்சிஸ்ட் கட்சியின் பேரணி நடைபெற்றது. பேரணியின் போது புகைப்படம் எடுக்க தொண்டர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் தொண்டர்கள் போலீசாரிடையே வாக்குவாதம் முற்றியதால் போலீசார் தடியடி நடத்த நேரிட்டது.