கமலுக்கு சொந்த புத்தியும் இல்லை சொல்புத்தியும் இல்லை.. மாஜி எம்எல்ஏ பாய்ச்சல்
கமலுக்கு சொந்த புத்தியும் இல்லை சொல்புத்தியும் இல்லை என முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.
Recommended Video
கோவை: கமலுக்கு சொந்த புத்தியும் இல்லை சொல்புத்தியும் இல்லை என முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் விமர்சித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த ஓராண்டாகவே அரசியல் தொடர்பாக கருத்துக்களை கூறி வருகிறார். அவ்வப்போது அரசியல் தொடர்பான விமர்சனங்களையும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்.
எண்ணூர் துறைமுகப் பகுயில் உள்ள ஆக்கிரமிப்பு கழிவுகளால் வட சென்னைக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்திருந்தார். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அரசியல் தலைவர்கள் வரவேற்பு
இந்நிலையில் இன்று காலையில் நடிகர் கமல்ஹாசன் துறைமுகப் பகுதியை பார்வையிட்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
கமல் மீது குற்றச்சாட்டு
இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவான கோவை செல்வராஜ் கமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மக்கள் மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி 1945ஆம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்ததைப் போல் வாழ வேண்டும் என கமல் நினைப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.
சிந்திக்க தெரியவில்லை
கமல் தன்பாட்டுக்கு செயல்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க தெரியவில்லை என்றும் கோவை செல்வராஜ் குற்றம்சாட்டினார்.
சொல் புத்தியும் இல்லை
கமலுக்கு சிந்திக்கிற சக்தியும் இல்லை செயல்படுகிற சக்தியும் இல்லை என்றும் கமலுக்கு சொந்த புத்தியும் இல்லை சொல் புத்தியும் இல்லை என்றும் கோவை செல்வராஜ் கடுமையாக விமர்சித்தார். நடிகர் கமல்ஹாசனுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.