For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெ. மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவிடம் 4 மணிநேரம் விசாரணை!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலர் ராம மோகன ராவ் விசாரணை கமிஷனில் இன்று ஆஜரானார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலர் ராம மோகன ராவ் விசாரணை கமிஷனில் இன்று ஆஜரானார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக சார்பில் விசாரணை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக புகார் அளித்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றது.
இதுவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக், தீபாவின் கணவர் மாதவன் உள்ளிட்ட பலரிடம் விசாரணை கமிஷன் விசாரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் விசாரணை கமிஷனில் இன்று ஆஜரானார்.
விசாரணை கமிஷனில் ஆஜரான ராமமோகன ராவிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
Comments
jayalalitha dead former tamilnadu chief secretary rama mohana rao arumugasamy inquiry commission ஜெயலலிதா மரணம் தலைமை செயலர் ராம மோகன ராவ் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன்
English summary
Former Tamilnadu chief secretary Rama mohana rao appeared in the Arumugasami inquire commission. over 4 hours the inquire conducted with him.
Story first published: Thursday, December 21, 2017, 17:01 [IST]