ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு 4 உதவி கமிஷனர்கள் நியமனம்!
ஆர்கே.நகர் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு 4 உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஆர்கே.நகர் தொகுதிக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு 4 உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருவொற்றியூர் பகுதி உதவி கமிஷனராக விமலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அத்தொகுதியில் அரசியல் கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்து வருகின்றனர்.
அதேநேரத்தில் டிடிவி தினகரனின் தரப்பு தேர்தலை நிறுத்த சட்டம் ஒழுங்கு பிரச்சையை ஏற்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் கட்சிக்கு ஆதரவான பல அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆர்கே.நகர் தொகுதிக்குட்பட்ட காவல்நிலையத்திற்கு 4 உதவி கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வண்ணாரப்பேட்டை உதவி ஆணையராக அர்னால்டு ஈஸ்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
துறைமுக உதவி ஆணையராக உள்ள அர்னால்டு ஈஸ்டருக்கு கூடுதலாக இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் எம்கேபி நகர் உதவி கமிஷனராக சுப்பரயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவொற்றியூர் உதவி கமிஷனராக விமலனும், அண்ணாநகர் உதவி கமிஷனர் சந்திர சேகருக்கு ராயபுரம் உதவி கமிஷனராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.