For Daily Alerts
Just In
திருவள்ளூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பலி
திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருகே ஆர்.கே பேட்டை அருகே உள்ள ஐய்யன் கண்டிகை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் அந்த கிராமத்தின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடித்து செல்லப்பட்டனர்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்க அப்பகுதியில் போராடினர். ஆனால் தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 4 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த பார்த்திபன், புவனேஸ்வரி,ஸ்வேதா, கதிரவன் ஆவர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Four deaths were reported from a single family in a flood in the Kosstaalai river near Thiruvallur. Their bodys have been rescued.
Story first published: Friday, October 6, 2017, 13:01 [IST]