For Daily Alerts
Just In
ஃபாக்ஸ்கான் ஆலையை மூடுவதற்கு தடை: சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னையில் இயங்கி வந்த ஃபாக்ஸ்கான் ஆலையை மூடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த ஃபாக்ஸ்கான் ஆலை மூடுவதை எதிர்த்து அதன் 6 ஊழியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசிடம் அனுமதி பெறாமல் ஃபாக்ஸ்கான் ஆலையை மூட நிர்வாகம் முயற்சிக்கிறது. எந்த வித நடைமுறையும் பின்பற்றாமல் ஆலையை மூடுவதற்கு நிர்வாகம் முயற்சிக்கிறது; அதனை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஃபாக்ஸ்கான் ஆலையை மூடுவது தொடர்பாக வரும் 15-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்; அதுவரை ஆலையை மூடக் கூடாது என்று இன்று இடைக்கால தடை விதித்தது.
English summary
The Madras high court on Monday restrained Foxconn from shifting machinery from its Sriperumpudur facility which was closed on February 10, 2015, months after cellphone maker Nokia shut shop.
Story first published: Monday, June 8, 2015, 17:36 [IST]