For Daily Alerts
Just In
வீர வாஞ்சிநாதனின் நண்பர் மகன் தியாகி சொக்கலிங்கம் பிள்ளை மரணம்
செங்கோட்டை: வீர வாஞ்சி நாதரின் உற்ற நண்பரான தியாகி சாவடி அருணாச்ச்சலம் பிள்ளையின் மகன் தியாகி சொக்கலிங்கம் பிள்ளை செங்கோட்டையில் மரணமடைந்தார்.
இந்திய சுதந்திர போரட்டத்தின்போது முதலில் ஆயுதம் ஏந்தி ஆங்கிலேய மாவட்ட ஆட்சிதலைவர் ஆஸ்துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றவர் வீர வாஞ்சி நாதன். அவரது நெருங்கிய நண்பர் தியாகி சாவடி அருணாசலம் பிள்ளை. இவரது மகன் தியாகி சொக்கலிங்கம் பிள்ளை.
இவர் வயோதிகம் மற்றும் உடல் நலக் கோளாறு காரணமாக செங்கோட்டையில் நேற்று மாலை காலமானார்.அவரது உடலுக்கு முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள்,பொதுமக்கள்,அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Comments
English summary
Freedom fighter Chokkalingam pillai has passed away in Sekottai. He is the son of freedom fighter Savadi Arunachalam pillai.
Story first published: Thursday, November 28, 2013, 12:40 [IST]