ரேஷன் கடைகளை இழுத்து மூடவா மத்திய, மாநில அரசுகள்? - ஜி.ராமகிருஷ்ணன் காட்டம்: வீடியோ
மக்கள் தங்கள் உணவுக்கு நம்பியிருக்கும் ரேஷன் கடைகளை மூடவா மத்திய, மாநில அரசுகள் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சேலம்: ரேஷன் கடைகளை மூடுவதற்காகவா மத்திய, மாநில அரசுகள் என சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
நீட் தேர்வில் விலக்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், நீட் தேர்வில் மத்திய அரசு தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். இதனால் பல ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார்.
மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ரேஷன் கடைகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அரிசி உள்ளிட்ட பல உணவுப் பொருட்கள் கிடைக்காத நிலைமை ஏற்படும். அதை நம்பி வாழ்பவர்களின் நிலை என்ன ஆகும்? ரேஷன் கடைகளை மூடவா மத்திய, மாநில அரசுகள்? என காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.