For Quick Alerts
For Daily Alerts
Just In
காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் கெய்ல் குழாய் பதிப்பு.. எதிர்ப்பு தெரிவித்த 9 பேர் கைது!
காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் கெய்ல் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார்குடி: காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் கெய்ல் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் கெய்ல் எரிவாயு குழாய் பதிக்கும் பணி மீண்டும் தொடங்கியது. கோயில்நத்தம் கிராமத்தில் கெய்ல் குழாய் பதிப்பதை எதிர்த்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2016ல் நிறுத்தப்பட்ட பணி நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியுள்ளது.
விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடும் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டு இருந்த பணி தற்போது மீண்டும் தொடங்கி உள்ளது.
Comments
English summary
Gail gas pipeline fixing work is again started in Thiruvarur. Public protesting agains this. nine members has been arrested for protesting.
Story first published: Friday, February 9, 2018, 10:27 [IST]