மகாத்மா காந்தியின் 149வது பிறந்தநாள்- சென்னையில் ஆளுநர்,ஈபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி
மகாத்மா காந்தியடிகளின் 149வது பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினர்.
சென்னை: மகாத்மா காந்தியடிகளின் 149வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் வித்யாசாகர்ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தியடிகளின் 149-வது பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைக்கு காரணமாக இருந்ததற்காகவும், இந்திய விடுதலைப் போராட்டத்தை அஹிம்சை வழியில் மேற்கொண்டதற்காகவும், காந்தியடிகள் தேசப்பிதாவாகப் போற்றப்படுகிறார்.
சென்னை மெரீனா கடற்கரையில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் அமைச்சர்கள் செங்கோட்டையன் திண்டுக்கல் சீனிவாசன், அரசு அதிகாரிகள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காந்தி ஜெயந்தியையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில், தேசபக்தி பாடல்கள் பள்ளி மாணவ-மாணவிகளால் இசைக்கப்பட்டது.
மகாத்மா காந்தி அவர்களின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு மரியாதை. #GandhiJayanti pic.twitter.com/m1Pwljkdet
— O Panneerselvam (@OfficeOfOPS) October 2, 2017
நாட்டின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை அஹிம்சை வழியில் நடத்திய தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.