For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸ் வேட்டையில் சிக்கிய மதுரை ‘டாக்’ ரவி: துப்பாக்கி முனையில் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ‘டாக்' ரவி என்ற ரவிக்குமரை சென்னை அம்பத்தூரில் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்

லோக்சபா தேர்தலையொட்டி சென்னையில் தலை மறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம் மேற்பார்வையில் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான ரவுடி ஒழிப்பு தனிப்படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

செவ்வாய்கிழமை இரவு இன்ஸ்பெக்டர்கள் சிவராம் குமார், சபாபதி, ஸ்டீபன் மற்றும் போலீசார் அம்பத்தூர் ராக்கி தியேட்டர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் இருந்த வாலிபரிடம் துப்பாக்கி இருப்பது தெரிந்தது. மேலும் காரில் பயங்கர ஆயுதங்களும் இருந்தன.

விசாரணையில் அவன் பிரபல ரவுடி மதுரையை சேர்ந்த ‘டாக்' ரவி என்ற ரவிக்குமார் என்று தெரிந்து அவனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அவனது கைத்துப்பாக்கி அமெரிக்கா தயாரிப்பு ஆகும். இது எப்படி அவனுக்கு கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதான ‘டாக்' ரவி மீது திண்டுக்கல் மாவட்டத்தில் 4 கொலை வழக்கு உள்பட 25 வழக்குகள் உள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாய் பயிற்சியாளர்

மதுரையில் வெளிநாட்டு நாய்களுக்கு பயிற்சி அளிப்பவராகவும் மற்றும் நாய் வளர்ப்பு வியாபாரம் செய்து வந்ததால் அவனுக்கு ‘டாக்' ரவி என்ற பெயர் வந்தது.

2000-ம் ஆண்டு மதுரை வரிச்சியூர் செல்வத்தின் தம்பி இளங்கோ கொலை வழக்கு, 1999-ம் ஆண்டு ரவுடி திண்டுக்கல் பாண்டியன் தம்பி நாகராஜ் கொலை வழக்குகள் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு வரிச்சியூர் இளங்கோ கொலைக்கு பழிவாங்க அவரது அண்ணன் அழகர் மற்றும் கூட்டாளிகள் டாக் ரவியை தீர்த்து கட்ட அரும்பாக்கத்தில் தங்கி இருந்த போது போலீசார் கைது செய்தனர்.

தென் மாவட்டங்களில் எதிரிகள் அதிகமானதால் ‘டாக்' ரவி தலைமறைவாக சென்னையில் பதுங்கி இருந்தான். எதிரிகளிடம் இருந்து தப்பிக்க துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் அவன் சுற்றி வந்தது தெரிந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கியை கமிஷனர் அலுவலகத்தில் இன்று கமிஷனர் ஜார்ஜ் பார்வையிட்டார். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

English summary
One of the most-wanted gangsters in Tamil Nadu, Ravi Kumar alias ‘Dog’ Ravi (39), was nabbed by the Anti-Gangster Squad of the city police in a covert operation in Ambattur on Monday night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X