For Daily Alerts
Just In
திருச்சி அருகே ரயில் மோதி கேட் கீப்பர் பலி.. தண்டவாளத்தில் சிவப்புக்கொடியை அகற்றியபோது விபத்து
திருச்சி: மணப்பாறை அருகே ரயில் மோதி கேட் கீப்பர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கண்ணுடையான் பட்டியில் ரயில்வே கேட் கீப்பராக இருப்பவர் மோகன் குமார்.
இவர் ரயில் வருகைக்காக தண்டவாளத்தின் நடுவில் இருந்த சிவப்புக் கொடியை அகற்றினார். அப்போது அவ்வழியாக வந்த வைகை ரயில்
ரயில் வருகைக்காக தண்டவாளத்தில் சிவப்புக்கொடியை அகற்றியபோது ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மோகன் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Gate keeper dead adter rail hits in near in Trichy.
Story first published: Sunday, April 15, 2018, 10:51 [IST]