For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானார் வீணை காயத்ரி

Google Oneindia Tamil News

Gayathri is music varsity V-C
சென்னை: தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் வீணை எஸ். காயத்ரி.

3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை அவர் வகிப்பார் என்று அரசாணை கூறுகிறது. கடந்த வாரம்தான் இந்த நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு முன்பு, தமிழக அரசு இசைக் கல்லூரிகளுக்கான இயக்குநராகவும் அரசு இசைக் கல்லூரியின் முதல்வராகவும் காயத்ரி இருந்துள்ளார்.

இசைக் குடும்பத்தில் பிறந்த 54 வயதான காய்த்ரி, சிறு வயதிலேயே வீணைக் கலைஞராக பரிமளித்தவர். பேபி காயத்ரி என்ற பெயரில் சிறு வயதிலேயே வீணையில் கலக்கியவர்.

உலகின் பல நாடுகளிலும் இவரது வீணையின் நாதம் பரவி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

கலைமாமணி விருது உள்பட பல விருதுகளையும் வாங்கிக் குவித்தவர். மத்தியப் பிரதேச அரசின் குமார் காந்தர்வ் விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றவர் காயத்ரி.

English summary
E. Gayathri, veena maestro, has been appointed the first Vice-Chancellor of the Tamil Nadu Music and Fine Arts University. She will hold the office for three years, according to a government order issued last week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X