இவருக்குத் தெரியும் குட்கா விவரம் எல்லாமே.. எஸ்.பி. ஜெயக்குமார் மீது கை காட்டும் ஜார்ஜ்..!
Recommended Video
சென்னை: குட்கா விவகாரம் குறித்து குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாருக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் விளக்கம் அளித்தார்.
குட்கா ஊழல் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அச்சமயம் குட்கா ஊழலில் தொடர்புடையதாக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் பிவி ரமணா ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் இதுகுறித்து நொளம்பூரில் உள்ள ஜார்ஜ் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமாருக்குத்தான் எல்லாம் தெரியும். அவர் உயரதிகாரிகளுக்கு அறிக்கை ஏதும் அளிக்கவில்லை.
நடந்த உண்மைகளை அவர் உயரதிகாரிகளிடம் மறைத்து விட்டார். அவருக்கு பல பொறுப்புகளை கொடுத்தேன். ஆனால் அவர் சரியாக செயல்படவில்லை. விசாரணை குறித்த தகவலை ஜெயக்குமார் மறைத்தார். மேலும் பணி மூப்பில் அவருக்கு குறைந்த மதிப்பெண் தந்தேன்.
குட்கா விவகாரத்தில் என்னை குறித்து செயல்படுவது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஒரு காவல் துறை ஆணையர் மட்டுமே இந்த ஊழலை செய்ய முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.