For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3-வது முறையாக சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் நியமனம்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக எஸ். ஜார்ஜ் 3-வது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக 2012ம் ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அப்பதவியில் நீடித்து வந்து ஜார்ஜ் 2014 லோக்சபா தேர்தலையொட்டி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

George comes back as Chennai police commissioner

அதன் பின்னர் மீண்டும் சென்னை மாநகர ஆணையர் பதவியில் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜார்ஜ் மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டு சிறைத்துறை இயக்குநராக்கப்பட்டார்.

அவருக்கு பதிலாக டி.கே. ராஜேந்திரன் சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தமிழக டிஜிபியாக இருந்த அசோக்குமார் விருப்ப ஓய்வில் சென்றதைத் தொடர்ந்து புதிய டிஜிபியாக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக மீண்டும் ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

English summary
S. George appointed as Chennai Police commissioner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X