மகள் போன்ற பெண்ணை பலாத்காரம் செய்த கொடூர சித்தப்பா- கர்ப்பமான பிளஸ் 2 மாணவி!
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சொந்த சித்தப்பாவே, மகள் வயது மாணவியைக் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் இருந்த மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி திடீரென மாயமானார்.
போலீசில் புகார்:
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் இது குறித்து கீரிப்பாறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அழைத்துச் சென்ற சித்தப்பா:
இதில், மாணவி அவரது சித்தப்பா முருகன் என்பவருடன் சென்றிருப்பது தெரிய வந்தது.
ஆவேசமான குடும்பத்தினர்:
இந்தநிலையில் நேற்று முன் தினம் மாணவியுடன் முருகன் ஊருக்கு திரும்பினார். உறவு முறையில் மகளை கடத்தி சென்ற முருகனை கண்டதும் அவரது குடும்பத்தினர் ஆவேசமடைந்தனர்.
ஆசை வார்த்தைகள்:
அப்போது மாணவி மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். உறவினர்கள் அவரிடம் விசாரித்த போது, முருகன் மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கேரளா அழைத்து சென்றதாக கூறினார்.
பலாத்காரம் செய்த சித்தப்பா:
பால்வெட்டும் தொழிலாளியான முருகன் கேரளாவில் ஒரு ரப்பர் எஸ்டேட்டில் 3 மாதம் அடைத்து வைத்து மாணவியை பலாத்காரம் செய்தாராம். இதனால் கர்ப்பமடைந்ததிருப்பதாக கூறி மாணவி கண்ணீர் விட்டு அழுதார்.
ஏற்றுக் கொள்ளாத மனைவி:
இதைக்கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மாணவியை இந்த நிலைக்கு ஆளாக்கிய முருகனை ஏற்றுக் கொள்ள அவரது மனைவி மறுத்து விட்டார்.
போலீஸ் கைது:
மேலும், முருகன் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாணவியின் தாயார் கீரிப்பாறை போலீசில் புகார் செய்தார்.இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்துள்ளனர்.