+2 தேர்வில் தோல்வி.. கள்ளக்குறிச்சியில் கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை!
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலை!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த மாணவி இளமதி. இவர் அங்கிருந்த அரசு பள்ளியில் +2.தேர்வு எழுதிய நிலையில், அதற்கான முடிவுகளும் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.
இந்த தேர்வு முடிவில் மாணவி இளமதி தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளமதி, மனம் உடைந்து காணப்பட்டார். பின்னர் சோகம் தாளாமல் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், மாணவி சடலத்தை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி பலியானதால் நல்லாத்தூர் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.