கள்ளக்குறிச்சி பரபரப்பு மறைவதற்குள்.. கோவை அருகே கல்லூரி கிணற்றில் மாணவி சடலம் மீட்பு!
கோவை: கோவை அருகே தனியார் கல்லூரியில் உள்ள கிணற்றில் இருந்து மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரத்தில் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த மாணவிகள் சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் கடந்த 23-ஆம் தேதி கல்லூரியின் அருகே உள்ள ஒரு கிணற்றில் தண்ணீரில் மூழ்கி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
மாணவிகளின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழும்பியுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து அதிர்ச்சி தரும் விஷயங்கள் அம்பலமாகி வருகின்றன. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள கிணற்றில் இருந்து 2ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவியின் பெயர் திவ்யா எனத் தெரிய வந்துள்ளது. கல்லூரி கிணற்றில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திவ்யாவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே கல்விக்கூடங்கள் மாணவர்களின் உயிரைக் குடிக்கும் மரணக் கூடங்களாக மாறி வருவட்தாக குற்றாச்சாட்டு வலுத்துள்ள நிலையில், திவ்யாவின் மரணம் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.