For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் ஜிகே வாசன் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் ஜிகே வாசன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

Google Oneindia Tamil News

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திருச்சியில் ஜிகே வாசன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

GK Vasan keeps hunger strike demanding Cauvery Management board

ஆளுங்கட்சி உண்ணாவிரதம், எதிர்க்கட்சிகள் பந்த் என காவிரி மேலாண்மை வாரியத்துக்கான போராட்டம் களை கட்டி வருகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியில் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் உட்பட கட்சித்தொண்டர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அய்யாக்கண்ணு , பிஆர் பாண்டியன் ஆகிய விவசாய சங்க தலைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.

English summary
Tamil State congress leader GK Vasan keeps hunger strike demanding Cauvery Management board. Farmers association leaders PR Pandiyan and Ayyakannu also has participate in the strike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X