2 வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச முதலீட்டாளர் மாநாடு.. 2017ல் அடுத்த மாநாடு: ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என்றும், அடுத்த மாநாடு 2017ல் நடைபெற உள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் 2வது நாளான இன்று முதல்வர் ஜெயலலிதா நிறைவுரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலாவது முதலீட்டாளர் மாநாடே பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.
இந்த மாநாட்டுக்காக தமிழக அரசு, தொழிலதிபர்களுடன் ஏற்படுத்திக்கொண்ட தொடர்பை பயன்படுத்திக்கொள்ளும். இந்த தொடர்பை வலுப்படுத்தி, தொடர்ந்து முதலீட்டாளர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்துவதற்காக 2 வருடங்களுக்கு ஒருமுறை, சர்வதேச முதலீட்டாளர் மாநாடு தமிழகத்தி்ல் நடத்தப்படும் என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த முதலீட்டாளர் மாநாடு 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் என்பதையும் அறிவிக்கிறேன். இவ்வாறு பலத்த கைதட்டல்களுக்கு நடுவே ஜெயலலிதா அறிவித்தார்.