மோடி அறிவிப்பால் அத்தியாவசிய பொருட்கள் விலையெல்லாம் குறையப்போகுதாம்.. ஹெச்.ராஜா சொல்கிறார்
தங்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என பா.ஜ. க தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்திருப்பதன் மூலம் தங்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருப்பது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை என்றார்.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி மற்றும் தங்கம் விலை குறையும் என்று கூறிய அவர் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றார்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்தக கூறிய அவர், இதனால் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் இதில் அரசியல்வாதிகள் குமுறுவது உள்நோக்கம் கொண்டது என்று கூறிய ராஜா, கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் தப்ப முடியாது என்றார்.