For Daily Alerts
Just In
திருச்சி விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்-சுங்க அதிகாரிகள் அதிரடி
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடமிருந்து 7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரிலிருந்து வந்த பயணியிடம் ரூ.7.37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்றிரவு கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமானநிலையத்தில் ஏர் ஏசியா விமானம் தரையிறங்கியது அதிலிருந்து திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருச்சியை சேர்ந்த அபுதாகிர் என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அவருடைய பேண்ட் பாக்கெட்டில் ரூ.7.37 லட்சம் மதிப்புள்ள 239 கிராம் தங்கம் மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவற்றினை பறிமுதல் செய்த அதிகாரிகள், அபுதாகிரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
English summary
The passenger from Kolalumpur in Trichi airport was confiscated gold worth Rs 7.37 lakh. He was found to have hidden 239 grams of gold in his pocket when he tested the properties of a traitor in Trichy. Following this, the officers who confiscated them have been arrested and investigated
Story first published: Thursday, April 5, 2018, 17:06 [IST]