For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட்டப்பகலில் டூவிலரிலிருந்து லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்த திருடர்கள்- வீடியோ!

பட்டப்பகலில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த லட்சம் ரூபாயை கொள்ளையர்கள் தைரியமாகத் திருடிச் செல்லும் காட்சி சிசிடி கேமிராவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

By Suganthi
Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு கோபிச்செட்டிபாளையம் நம்பியூரில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் பெட்டியில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை பட்டப்பகலில் திருடர்கள் திருடிச் சென்றது சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 In Gopichettipalayam a person looted bundle of rupees in two wheeler

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் அருகில் உள்ள நம்பியூரில், ஒருவர் சாலையின் ஓரத்தின் தன் டூவிலரை நிறுத்தி செல்கிறார். அதன்பின்பு ஒரு வெள்ளைசட்டையணிந்த நபர் வருகிறார். டூவிலரின் பெட்டியை நிமிடத்தில் கள்ளச்சாவியை வைத்து திறக்கிறார்.

அதில் மஞ்சள்பையில் இருந்த ஒரு லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு யாருக்கும் பயப்படாமல் அங்கிருந்து இன்னொரு பைக்கில் வந்த நபருடன் ஏறிச் செல்கிறார். இவையனைத்தும் பட்டப்பகலில் ஒரு சில நிமிடங்களில் நடக்கிறது. இந்த காட்சிகள் எல்லாம் அருகே இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் பார்ப்பதற்கு ஒரு சினிமா போலவே இருக்கிறது.

English summary
In Gopichettipalayam Nambiyur a person opened two wheeler's box lock esaily and took money and escaped in another twowheeler. These scenes recorded in nearby cctv camera.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X