கல்யாண மண்டபம் இருக்கா.. இந்தா பிடி மன்ற பொறுப்பு.. இதெப்படி இருக்கு!!!!!!!!!!
கல்யாணம் மண்டபம் வைத்திருப்போருக்கு மன்ற பொறுப்பு தேடி வருகிறதாம்.
Recommended Video
சென்னை: தமிழகத்தின் தற்போதைய நிலையை பார்க்கும் போது 'ஏ தாழ்ந்த தமிழகமே!' என்கிற பேரறிஞர் அண்ணாவின் குரல்தான் நினைவுக்கு வருகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாக தத்துவங்கள், தர்க்கங்கள் என சீரும் சிறப்போடும் இருந்த தமிழ் மண் இப்போது இசங்களும் தேவை இல்லை.. தத்துவங்களும் தேவை இல்லை என்ற குரலையும் கேட்க வேண்டிய பரிதாப நிலைக்கு போய் இருக்கிறது.. வலதும் இல்லை இடதும் இல்லை மய்யம் என்கிற குரலாவது பரவாயில்லை.
இன்னொரு பக்கத்தில் நடக்கும் கூத்துகளை நினைத்தால் நெஞ்சமே பதறுகிறது.. தங்களது மன்றத்தில் பொறுப்பாளர்களை ஜரூராக நியமித்து வருகிறது ஒரு குரூப்.
இந்த மன்ற பொறுப்பாளர்களுக்கான பிரதான தகுதி படிப்பறிவு, அனுபவ அறிவு, ரசிகர் மன்ற பணி என எதுவுமே இல்லையாம்.. கல்யாண மண்டபம் இருக்கிறதா? அப்ப உங்களுக்கு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பொறுப்பு நிச்சயம்.
அட கொடுமையே! இது என்னய்யா புதிய தகுதியாக இருக்கிறதே என விசாரித்தா, கல்யாண மண்டபத்துக்காரரை பொறுப்பாளராக நியமித்தால் ஓசியிலேயே கூட்டங்களை நடத்தி முடித்துவிடலாம். ஒத்த ரூபாய் கூட செலவில்லாமல் ஓசியிலேயே முடிச்சிடலாம்னுதான் இப்படி ஒரு 'சிஸ்டம்' வைத்திருக்காங்களாம்!
நாடும் நாட்டு மக்களும்.....