சொப்பன சுந்தரி யாருகிட்ட இருக்காங்கன்னு மட்டும் கேட்காதீங்கோ!
சென்னை: தெருவோரம் நின்று கத்தி கத்தி கோஷம் போட்டு இன்று இந்த உயர்வான நிலைக்கு நானெல்லாம் வந்திருக்கிறேன்னா அதுக்கு காரணம் அவங்கதான் என உருக்கமாக அவர் பேசுவதை பார்த்தாலே பரிதாபமாக இருக்கும்...
இந்த குரலுக்கு சொந்தகாரர் சொல்வதில் பாதி உண்மை இருக்கிறது.. தெருவோரம் நின்று கத்தி கத்தி கோஷம் போட்டவரையில் உண்மை... ஆனால் அவங்கதான் எல்லாமுமாக்கினாங்க என அளந்துவிடுவதுதான் ஓவர். இனி இவர் பெயர் சொப்பன சுந்தரி.
சொப்பனசுந்தரி சார்ந்த கட்சியில் நந்தியாக இருந்தவர் கணியன். கணியனை காக்கா பிடிக்க படாதபாடு பட்டு பெரும் போராட்டத்துக்குப் பின்னர் முந்தானைக்குள் முடிகிற லெவலனுக்கு முன்னேறிவிட்டார் சொப்ஸ்.
அப்புறம் என்ன கட்சியில் எல்லாம் ஏறுமுகம்தான்.. இதன் உச்சகட்டமாக அமைச்சர் பதவியெல்லாம் கூட கிடைத்தது.. சொப்ஸ் கனவிலும் நினைக்க முடியாத உயரத்துக்குப் போனார்.
அப்போதுதான் கட்சியில் தலையெடுக்க தொடங்கிய கடலோர மாவட்ட டாக்டர், சொப்ஸ் பிடியில் சிக்கிக் கொள்கிறார்... சொப்ஸுக்கு ஏற்கனவே தரகர் தங்கமுலாமும் 'நெருக்கம்தான்
சொப்ஸ், டாக்டர் ப்ளஸ் தரகர் மூவரும் கை கோர்த்து ஆடிய ஆட்டம் சொல்லி மாளாதாது.. தரகர் முதலில் சிக்கினார்.. இப்போது டாக்டர் சிக்கினார்... அடுத்து என்ன நடக்குமோ என பதறிப் போய் கிடக்கிறாராம் சொப்ஸ்.
எல்லாம் சரி, "சொப்ஸை" இப்ப யாரு வெச்சிருக்காங்கன்னு மட்டும் கேட்டுடாதீங்க மக்களே!