For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செய்யாறு அருகே அரசுப் பேருந்து மோதி கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலி

செய்யாறு அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மோதி விபத்து கணவன் மனைவி பலி

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: செய்யாறு அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Government bus hit on Two wheeler; a couple died

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வடுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (35), அவரது மனைவி நதியா (30) இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதற்கு பத்திரிகை அச்சடிப்பதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை செய்யாறுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர், செய்யாறில் இருந்து தங்களுடைய் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது செய்யாறு - ஆரணி சாலையில் தண்டரை கிராமம் அருகே, செய்யாறு நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

குழந்தைகளின் காதணி விழாவுக்கு பத்திரிகை அச்சடிக்க சென்ற கணவன் மனைவி பேருந்து மோதி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Government bus hit on Two wheeler, husband and wife dead near Cheyyar. the police sent the couples body to postmortem to district government hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X