For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேராசிரியைக்கு அரிவாளால் வெட்டு... கணவர் தற்கொலை.. குமரியில் பயங்கரம்

Google Oneindia Tamil News

Recommended Video

    பேராசிரியைக்கு அரிவாளால் வெட்டு.. கணவர் தற்கொலை.. குமரியில் பயங்கரம்- வீடியோ

    குமரி: பேராசிரியையை துடிக்க துடிக்க அரிவாளால் வெட்டிய கணவர் கர்நாடகாவுக்கு சென்று தலைமறைவாக இருந்த நிலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கனகப்புரத்தைச் சேர்ந்தவர் டால்டன் செல்வ எட்வர்ட் (40). இவர் ஒரு வழக்கறிஞர். இவருடைய மனைவி ஜெகதீஷ் ஷைனி (33). அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

    Government College Professor gets cut by her husband

    இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும் 2 வயதில் மகளும் உள்ளனர். கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. சம்பம் நடைபெற்ற நாளன்றும் இவர்களுக்கு தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆவேசம் அடைந்த எட்வர்ட், ஷைனியை அரிவாளால் வெட்டி சாய்த்தார். அதில் படுகாயமடைந்த ஷைனியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே எட்வர்ட் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார்.

    தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் நேற்று காலை கர்நாடக மாநிலம் மாண்டியா அருகில் எலியூர் பகுதியில் தண்டவாளத்தில் ஒரு ஆண் சடலம் இருந்தது. அங்கு பார் கவுன்சில் அடையாள அட்டை இருந்தது.

    அந்த முகவரியை விசாரித்ததில் இறந்தவர் எட்வர்ட் என்பது தெரியவந்தது. மனைவியை வெட்டியதால் போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து எட்வர்ட் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    English summary
    An Advocate from Kanyakumari commits suicide in Karnataka after he cut his wife through scythe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X