நிறைவேறியது மாணவர்களின் கண்ணீர் கோரிக்கை.. ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்திவைப்பு!
திருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
திருத்தணி: மாணவர்கள் கண்ணீர் விட்டு போராட்டம் நடத்தியதை அடுத்து திருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இது மாணவர்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருகே பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை மாணவர்கள் கட்டிப்பிடித்து வெளியே விடாமல் கண்ணீர் விடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ளது அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதில் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியராக உள்ள பகவான் மற்றும் சுகுணா ஆகியோர் உள்ளனர். கடந்த வாரம் பகவான் மற்றும் சுகுணா ஆகியோர் அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிராக நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் முன்வாசலுக்கு பூட்டுப் போட்டு பள்ளி முன்பு பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவான் பணியிட மாற்ற உத்தரவு நகலை வாங்கிக் கொண்டு செல்ல முயன்றார். அப்போது அனைத்து மாணவர்களும் ஆசிரியர் பகவானின் காலை பிடித்துக் கொண்டு இங்கிருந்து நீங்கள் மாறுதலாகி செல்லக்கூடாது என்று கதறி அழுதுள்ளனர்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆசிரியர் பகவான் மன அழுத்தத்தில் கண்ணீர் விட்டு அழுதார். இவர்களின் வீடியோ தமிழகம் முழுக்க வைரலானது.
இந்த நிலையில் தற்போது ஆச்சர்யமாக திருவள்ளூர் ஆசிரியர் பகவானின் பணியிட மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.மாணவர்கள் கோரிக்கையை ஏற்று பகவான் பணியிட மாற்றம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.இது மாணவர்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.