For Daily Alerts
Just In
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: கி.வீரமணி கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார் அக்கட்சித் தலைவர் கி.வீரமணி.
அப்போது அவர் பேசியதாவது:-
கர்நாடகா, கேரளா உள்ளிட்டவற்றில் மாநில பிரச்சனைகளுக்காக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. ஆனால், தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன. மத்தியில் உள்ள பாஜக அரசு, கல்வித்துறையை காவிமயமாக்கி வருகிறது. கல்வி நிலையங்களில் சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க முயற்சிப்பது கண்டனத்துக்கு உரியது. கல்வித்துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பள்ளி மாணவர்களும் மதுவுக்கு அடிமையாகி வருவதால், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
English summary
The dravidar Kazhagam president Veeramani has demanded the state government to ban alcohol sales throughout the state.
Story first published: Monday, December 8, 2014, 7:53 [IST]