For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவை மருத்துவமனை ஊழியரிடம் அரசு கருவூல துப்பாக்கி வந்தது எப்படி? போலீசார் விசாரணை

அரசு கருவூலத்திலிருந்து துப்பாக்கி எப்படி வெளியில் வந்தது என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

கடலூர்: கடலூர் கூத்தப்பாக்கத்தில் சாம்ராஜ் என்பவரிடம் இருந்து போலீசார் துப்பாக்கி பறிமுதல் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிபவர் சாம்ராஜ். தனது மனைவியை கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக இவர்மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Government Treasury gun to hospital staff

இதுகுறித்து சாம்ராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடலூர் அரசு கருவூலத்தில் பணி புரியும் ஒருவர் தனக்கு இந்த துப்பாக்கியை கொடுத்ததாக சொன்ன தகவலையடுத்து போலீசார் அதிர்ந்து போயினர்.

கடலூர் அரசு கருவூலத்தின் பாதுகாப்பு அறையிலிருந்த துப்பாக்கி எப்படி வெளியே வந்தது என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
The incident that has been seized by police from Samraj in Cuddalore Koottapakkam has created a shock. The police investigated the case with the pistol and threatened his wife. The Cuddalore state treasury was investigating the case of a gunman who had been given the gun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X