சர்ச்சைகளுக்கு நடுவே நாளை டெல்லி விரைகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
சர்ச்சைகளுக்கு நடுவே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்கிறார்.
Recommended Video
சென்னை: சர்ச்சைகளுக்கு நடுவே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்கிறார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பத்திரிக்கையாளர் கன்னத்தை தட்டிய சம்பவம் மற்றும் பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மன்னிப்பு கேட்ட போதும் எதிர்க்கட்சிகள் விடுவதாயில்லை. ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்கிறார். தொடரும் சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு நடுவே ஆளுநர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேராசிரியர் நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரம் குறித்து விளக்கமளிக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.