For Quick Alerts
For Daily Alerts
Just In
வேகமும், கவனக்குறைவும் பலரது உயிரை பறிக்கிறது: ஆளுநர் ரோசய்யா வேதனை !
சென்னை: வேகமும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும் பலரது உயிரை பறிப்பதாக ஆளுநர் கே.ரோசய்யா வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, நேற்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் 14 பேர் பலியானதும், பலர் காயம் அடைந்ததும் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன்.
வேகமும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதும் பலரது உயிரை பறிப்பதுடன், பலருக்கு காயத்தையும் ஏற்படுத்துகிறது.
விபத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விரும்புவதாகவும் தனது இரங்கல் செய்தியில் ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
English summary
Tamilnadu governor rosaiah Mourning to madurai bus accident victims family
Story first published: Sunday, February 7, 2016, 4:00 [IST]