சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு மக்கள் சம்மதம் இல்லாவிட்டால் கைவிடவேண்டும் : ஜி.கே.வாசன்
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு மக்கள் சம்மதம் இல்லாவிட்டால் கைவிடவேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு மக்கள் சம்மதம இல்லாவிட்டால் அதைக் கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில். நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தமாகா தயாராகி வருகிறது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது வரவேற்கத்தக்கது. அதே வேளையில், சேலம் - சென்னை 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மக்களின் சம்மதம் பெற வேண்டும்.
மக்களின் சம்மதம் இல்லாவிட்டால் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதுபோல, சாலை அமைக்கும்போது பொதுமக்களுக்கும், விவசாயத்திற்கும் எந்த வித பாதிப்பும் இல்லாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது பிடிவாதப்போக்கை கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.