For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீசுக்கு தகவல் தர மறுத்தால் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை துரத்த வேண்டும் : அதிமுக எம்.எல்.ஏ பரமசிவம்

போலீஸ்க்கு தகவல் தர மறுத்தால் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை தமிழகத்தில் இருந்து துரத்த வேண்டும் என்று எம் எல் ஏ பரமசிவம் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : போலீஸ் கேட்கும் தகவல்களைக் கொடுக்க மறுக்கும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களை அரசு தமிழகத்தில் இருந்து துரத்த வேண்டும் என்று அதிமுக எம் எல் ஏ வி.பி.பி பரமசிவம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் வேடசந்தூர் அதிமுக சட்டசபை உறுப்பினர் வி.பி.பி பரமசிவம் பேசினார்.

Govt should take actions against FB and Whatsapp says Paramasivam MLA

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர் அதிகரித்துள்ளனர். அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தேவையற்ற வதந்தி பரப்புவோரின் விவரத்தை ஃபேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் போலீஸுக்குத் தர வேண்டும். போலீஸுக்குத் தகவல் தர மறுக்கும் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களைத் தமிழகத்தில் இருந்து அரசு துரத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Govt should take actions against FB and Whatsapp says Paramasivam MLA. Vedasanthur ADMK MLA VPP Paramasivam says that, FB and whatsapp should give the Details of the rumour spreading persons .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X