For Quick Alerts
For Daily Alerts
Just In
அனிதா வீடு அருகே இயக்குநர் கவுதமன் தலைமையில் போராட்டம்
திருச்சி: நீட் தேர்வு திணிப்பு காரணமாக தற்கொலை செய்துகொண்ட, மாணவி அனிதா வீடு அருகே திரைப்பட இயக்குநர் கவுதமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அரியலூரை சேர்ந்த குழுமூரில் அனிதா வீடு உள்ளது. அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று காலை இயக்குநர் கவுதமன் அங்கு வந்தார். இதன்பிறகு வீடுக்கு சற்று தூரத்தில் அவர் ஆர்ப்பாட்டத்தில் குதித்தார். சுமார் 100 பேர் அவருடன் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
Comments
English summary
Director Gowthaman and around 100 people enter protest near Anitha house, at her native village.
Story first published: Saturday, September 2, 2017, 8:49 [IST]