கிரானைட் முறைகேடு- மேலூர் நீதிமன்றத்தில் 3633 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
கிரானைட் முறைகேட்டில் அரசுக்கு 1,365 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய புகாரில் பிஆர்பி, மதுரா நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் 3,633 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட
மதுரை: கிரானைட் முறைகேட்டில் பிஆர்பி, மதுரா உள்ளிட்ட 3 நிறுவனங்கள் மீது மேலூர் நீதிமன்றத்தில் 3,633 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக அரசுக்கு 1,365 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அவற்றை அரசு நிலங்களில் அனுமதியின்றி அடுக்கி வைத்தாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்து அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பி, மதுரை, ராஜசேகரன், ஆர்வி எண்டர்பிரைசஸ், ஓம் ஸ்ரீ கிரானைட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதுதொடர்பாக மேலூர் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிஆர்பி, மதுரா, ராஜசேகரன் ஆகிய 3 நிறுவனங்கள் மீது கிரானைட் முறைகேடு தொடர்பாக 3,633 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக அரசுக்கு 1,365 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.