For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாணவர்களே வரவில்லை.. முதல்வர் படித்த + பங்கேற்ற பள்ளி ஆண்டு விழாவில் சர்ச்சை!

பள்ளி மாணவர்கள் இல்லாமல் முதலமைச்சர் பங்கேற்ற ஆண்டு விழா நடைபெற்றது.

By A S Ramesh
Google Oneindia Tamil News

Recommended Video

    மாணவர்கள் யாருமின்றி நடைபெற்ற பள்ளி ஆண்டு விழா-வீடியோ

    ஈரோடு: தாம் படித்த பள்ளியின் ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றிருந்தாலும், அந்நிகழ்ச்சிக்கு மாணவர்கள் யாருமின்றி விழா நடைபெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

    ஈரோடு மாவட்டம் பவானியில் காளிங்கராயன் மணிமண்டபம் திறப்புவிழா, அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது.

    Great Controversy In Chief Ministers School Annual Function In Erode

    தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமி 1967 ம் ஆண்டில் 6 ம் வகுப்பில் இந்த பள்ளியில் சேர்ந்து 11-ம் வகுப்பு வரை படித்துள்ளார். விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிச்சாமி பேசும்போது, தாம் பள்ளியில் படித்ததை நினைவு கூர்ந்தார். மேலும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடியதை மறக்க முடியாது என்று தெரிவித்த அவர் தனது விளையாட்டு ஆசிரியரின் முயற்சியால்தான் இந்த அளவிற்கு உயர்ந்ததாக தெரிவித்தார்.

    Great Controversy In Chief Ministers School Annual Function In Erode

    மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நிறைவேற்றுவதாக அறிவித்தார். தாம் படித்த பள்ளியின் ஆண்டுவிழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றிருந்தாலும், அந்நிகழ்ச்சிக்கு மாணவர்கள் யாருமின்றி விழா நடைபெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!

    Great Controversy In Chief Ministers School Annual Function In Erode

    நலத்திட்ட உதவி பெற வந்தவர்களும், அரசு அதிகாரிகளும்,ஆளும் கட்சியினரும் மைதானத்தை நிரப்பியிருந்தாலும் மாணவர்கள் இல்லாமல் பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சிகள் எவ்வாறு முழுமையடையும் என்பதுதான் பொதுமக்களின் கேள்வி. தாம் படித்த பள்ளியில் முதல்வர் பங்கேற்ற விழா நடைபெறும் நேரத்தில் குறிப்பிட்ட மாணவர்களையாவது அதில் பங்கேற்க செய்திருக்க வேண்டும். விழா நடத்தியவர்கள் மறந்தது ஏனோ காரணம் தெரியவில்லை. ஒருவேளை அம்மாவின் வழிகாட்டுதலில் நடக்கும் ஆட்சியில் இப்படித்தானோ??

    English summary
    Government Higher Secondary School function held in Bhavani in Erode district today. Chief Minister Palanisamy participated in the school's annual function. But the function held a great controversy without students!
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X