ரூ. 40 கோடி வரி ஏய்ப்பு... வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் ரெய்டு!
சென்னை திநகரிலுள்ள வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ், ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
சென்னை : வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து சென்னை தி.நகரிலுள்ள வசந்த் & கோ, சரவணா ஸ்டோர்ஸ், ஹாட் சிப்ஸ் நிறுவனங்களில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பிரம்மாண்டமாய் கடை மற்றும் இதே நிறுவனத்தின் பாடிக் கிளையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கடைகள் தவிர வசந்த் அன் கோ, ஹாட் சிப்ஸ் உள்ளிட்ட கடைகளிலும் ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜிஸ்டி வரி அமலுக்குப் பிறகு வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்காணித்து சோதனை நடத்துவதற்காக புலனாய்வு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் கடை மட்டுமே ரூ. 40 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்த நிலையில் இந்த சோதனை நடக்கிறது. சென்னையில் மொத்தம் 6 இடங்களிலும் கோவையில் 2 இடங்களிலும் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.