ஆளுநர் மாளிகையில் முற்றுகையிட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு
ஆளுநர் மாளிகையில் முற்றுகையிட்ட ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டன.
Recommended Video
சென்னை: ஆளுநர் மாளிகையில் முற்றுகையிட்ட ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
நாமக்கல்லுக்கு நிகழ்ச்சிக்கு வந்த ஆளுநரின் கார் மீது திமுகவினர் கருப்பு கொடிகளை வீசியும், கருப்பு பலூன்களை வீசியும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 192 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது அவர்களை போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீஸார் விடுதலை செய்தனர். இந்நிலையில் ஸ்டாலின் உள்ளிட்ட 1111 பேர் மீது கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் மீது அனுமதியின்றி சட்டவிரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.