குண்டர் சட்டம் வேண்டும்... என்கவுன்டர் வேண்டும்... அடம்பிடிக்கும் புதுவை பாஜக - வீடியோ
புதுவையில் ரவுடிகளைக் கட்டுப்படுத்த குண்டர் சட்டம் வேண்டும், என்கவுன்டர் வேண்டும் என புதுவை பாஜக தலைவர் சுவமிநாதன் கூறியுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் குண்டர் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். என்கவுன்டர் மூலம் ரவுடிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என புதுச்சேரி பாஜக தலைவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. எனவே கொலைக் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானாலும் குண்டர் சட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென புதுச்சேரி பாஜக தலைவர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமிக்கு தைரியம் இருந்தால் அவர் என்கவுன்டர் மூலம் ரவுடிகளை அடக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அவர் கூறியிள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் புதுச்சேரி அரசுக்கும் மோதல் இருந்துகொண்டே உள்ளது. அரசு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாதபடி பல கோப்புகளில் கையெழுத்திடாமல் வைத்துள்ளார் கிரண்பேடி.
இந்நிலையில் புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குண்டர் சட்டம், என்கவுன்டர் என புதுவை பாஜக அச்சமூட்டி வருகிறது.