கருணாநிதி நலமுடன் இருந்தபோதே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழவில்லை: வரிந்துகட்டும் துக்ளக் குருமூர்த்தி!
கருணாநிதி நலமுடன் இருந்தபோதே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை எனக் கூறி துக்ளக் குருமூர்த்தி டிவிட்டரில் ஆதரமாக வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: கருணாநிதி நலமுடன் இருந்தபோதே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை எனக் கூறி துக்ளக் குருமூர்த்தி டிவிட்டரில் ஆதரமாக வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமதித்தற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜயேந்திரர் மீது இரண்டாவது நாளாக இன்றும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விஜயேந்திரர் செய்ததை நியாயப்படுத்தி துக்ளக் குருமூர்த்தி டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அதில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை திகவினரும், அராஜகவாதிகளும் இழிவுபடுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
DK & anarchists are abusing, burning effigies of Kanchi Acharya Vijayayendra Saraswati for sitting when prayer in praise of Mother Tamil was sung. For info, here is all Tamil leader & CM Karunanidhi sitting when the song was sung at Tamil conference in 2010 when he was healthy pic.twitter.com/LiPO3QuvzP
— S Gurumurthy (@sgurumurthy) January 25, 2018
2010ஆம் ஆண்டு தமிழ் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது கருணாநிதி அமர்ந்திருந்தார். உடல் நலத்துடன் இருந்தபோது கருணாநிதி அமர்ந்திருந்தார் என்றும் அப்போது மேடையில் இருந்தவர்கள் எல்லாம் தமிழ்த் தலைவர்கள்தான் என்றும் துக்ளக் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆதரமாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.