For Daily Alerts
Just In
ஊழல் செய்தால் பதவி உயர்வு தரும் அரசு இது- துரைமுருகன் குற்றச்சாட்டு
குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு ஆளான டிஜிபி டிகே. ராஜேந்திரனின் பதவியை நீட்டிப்பு செய்தது ஏன் என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மட்டும்தான் ஊழல் புகாருக்கு ஆளான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு தருகின்றனர் என்று எதிர்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தடை செய்யப்பட்ட போதைப்பொருள் குட்காவை விற்க ரூ.40 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக திமுகவினர் புகார் கூறியுள்ளனர். குட்கா விவகாரம் தொடர்பாக துரைமுருகன் பேச சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே இதனைக் கண்டித்து திமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், குட்கா, பான்மசாலா விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் என்று கூறினார். டிஜிபிக்கு பதவிநீட்டிப்பு தரப்பட்டது குறித்து விளக்கம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.
English summary
The DMK staged a walkout from the Tamil Nadu Assembly after Speaker P Dhanpal refused to read out the Governor’s instructions seeking an explanation on theGutka bribery issue.
Story first published: Monday, July 3, 2017, 13:28 [IST]